sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனி மூதாட்டி கொலை: மதுரையில் வாலிபர் சரண் 12 பவுன் நகைகள் பறிமுதல்

/

தேனி மூதாட்டி கொலை: மதுரையில் வாலிபர் சரண் 12 பவுன் நகைகள் பறிமுதல்

தேனி மூதாட்டி கொலை: மதுரையில் வாலிபர் சரண் 12 பவுன் நகைகள் பறிமுதல்

தேனி மூதாட்டி கொலை: மதுரையில் வாலிபர் சரண் 12 பவுன் நகைகள் பறிமுதல்


ADDED : செப் 21, 2024 12:51 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே மரிக்குண்டில் வட்டிக்கு பணம் வாங்கும் பிரச்னையில் மூதாட்டி பவுன்தாயை 60, கொலை செய்த வழக்கில் உறவினர் அருண் 26, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடமிருந்து 12 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

மரிக்குண்டிலுள்ள பாழடைந்த கிணற்றில் செப்., 13 ல் பவுன்தாய் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கிணற்றிலிருந்து உடலை மீட்ட போலீசார் விசாரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன் இதில் தொடர்புடைய பழனித்தேவன்பட்டி ரமேஷ் மகன் அருண் 26, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். போலீசார் கூறியதாவது: அருண் தேனியில் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய உறவினரான பவுன்தாயிடம் வட்டிக்கு பணம் கேட்டார். பணம் இருப்பில் இல்லாததால் நகைகளை கொடுக்க மூதாட்டி சம்மதித்துள்ளார். ஆனால் நகைகளை அருணிடம் நேரடியாக வழங்காமல் அவரது குடும்ப உறவினர்கள் மூலம் கொடுக்கவும் சம்மதித்துள்ளார். இதனால் அதிருப்தியுற்ற அருண் டூவீலரில் பவுன்தாயை அழைத்து செல்லும் போது ஊருக்கு ஒதுக்குப்புறம் நகைகளை பறித்து கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் தள்ளியுள்ளார் என்றனர்.

பிறகு அருண் தேனி தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us