sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குடிமகன்களின் கூடாரமாகும் தேனி ரயில்வே ஸ்டேஷன்

/

குடிமகன்களின் கூடாரமாகும் தேனி ரயில்வே ஸ்டேஷன்

குடிமகன்களின் கூடாரமாகும் தேனி ரயில்வே ஸ்டேஷன்

குடிமகன்களின் கூடாரமாகும் தேனி ரயில்வே ஸ்டேஷன்


ADDED : டிச 02, 2024 05:43 AM

Google News

ADDED : டிச 02, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி ரயில்வே ஸ்டேஷன் பழைய டிக்கெட் கவுண்டர் கட்டடம், பயன்பாடில்லாத கழிப்பறை பகுதிகள் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.

தேனி மாவட்டத்திற்கு தினமும் மதுரையில் இருந்து போடிக்கு ஒரு ரயிலும், வாரத்தில் 3 நாட்கள் சென்னையில் இருந்து போடிக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்திலும் இதே நிலை தொடர்கிறது. இதனால் தேனி ரயில்வே ஸ்டேஷனில் பகல் நேரத்தில் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னை ரயில் இல்லாத தினங்களில் 7:00 மணிக்கு மேல் ரயில்வே ஸ்டேஷன் பகுதிக்கு யாரும் செல்வது இல்லை.

இதனை சாதகமாக பயன்படுத்தும் சமூக விரோதிகள் ரயில்வே ஸ்டேஷன் பழைய டிக்கெட் கவுண்டர் இருந்த பகுதியை 'மது பாராக' மாற்றி வருகின்றனர். அந்த பகுதியில் அதிக அளவில் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசியுள்ளனர். ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் இரவு ரோந்து செல்லவும், பயன்பாட்டில் இல்லாத கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us