sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சாப்பாடுனு வந்திட்ட சண்டை இல்லை படையப்பா, ஒற்றை கொம்பன் சமாதானம்

/

சாப்பாடுனு வந்திட்ட சண்டை இல்லை படையப்பா, ஒற்றை கொம்பன் சமாதானம்

சாப்பாடுனு வந்திட்ட சண்டை இல்லை படையப்பா, ஒற்றை கொம்பன் சமாதானம்

சாப்பாடுனு வந்திட்ட சண்டை இல்லை படையப்பா, ஒற்றை கொம்பன் சமாதானம்


ADDED : ஏப் 20, 2025 04:54 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : எதிரும், புதிருமாக சண்டையிட்டு கொள்ளும் படையப்பா, ஒற்றை கொம்பன் காட்டு யானைகள் சாப்பாடுனு வந்துட்டா சண்டையிடாமல் சமாதானமாகி விடுகின்றன.

மூணாறு, தேவிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை கணக்குப்படி 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

அவற்றில் படையப்பா, ஊசி கொம்பன், ஒற்றை தந்தங்களைக் கொண்ட இரண்டு ஒற்றை கொம்பன்கள், விரிந்த கொம்பன் உள்பட சில ஆண் காட்டு யானைகள் மிகவும் பிரபலம்.

அவற்றில் எதிரும், புதிருமாக சுற்றித் திரியும் படையப்பா, ஒற்றை கொம்பன்கள் ஆகியவை நேருக்கு, நேர் எதிர் கொண்டால் பலமாக மோதி சண்டையிட்டு கொள்ளும்.

மோதல்: அவை, மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பகுதியில் கடந்த செப்.3ல், பிப்.5ல் என இருமுறை பலமாக மோதிக் கொண்டன.

இந்நிலையில் மூணாறில் இருந்து கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் காய்கறி, உணவு கழிவுகளை தின்பதற்கு படையப்பா, ஒற்றை கொம்பன்கள் ஆகியவை தனித்தனியாக நாள் கணக்கில் முகாமிடும்.

சமாதானம்: தற்போது அங்கு படையப்பா, ஒற்றை கொம்பன் ஆகியவை கடந்த மூன்று நாட்களாக முகாமிட்டுள்ளன. அவை 'சாப்பாடுனு வந்துட்டா சண்டையில்லை சமாதானம்' என்ற ரீதியில் ஒன்றாக தீவனங்களை தின்று வருகின்றன. அவற்றை வனத்துறை அதிரடி படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us