ADDED : நவ 10, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அருகே அய்யனார்புரம் மனோஜ்குமார் 19. இவரது நண்பர் கதிரேசன்.
இருவரும் சிறு பிரச்னையால் பிரிந்தனர். இந்நிலையில் தேனியில் இருந்து வீடு திரும்பிய மனோஜ்குமாரை ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த நந்தகுமார் நிறுத்தி கத்தியால் கையில் குத்தினார். அவருடன் இருந்து கதிரேசன், இளையராஜா ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த மனோஜ்குமார் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.