ADDED : ஆக 23, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நீதிராஜா 40.
இவரது நண்பரான மதுரை வளையப்பட்டி பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் 21. அதே ஊரைச் சேர்ந்த மாரிக்கண்ணன் 22. மூவரும் தேவதானப்பட்டி பஸ்ஸ்டாண்ட் பகுதியில் சில்லறை விற்பனையில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. சிறப்பு எஸ்.ஐ., தங்கவேல்சாமி நடத்திய சோதனையில் மூவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் விற்பனை செய்த ரூ.2 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.