sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புலிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

/

புலிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

புலிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

புலிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு


ADDED : அக் 19, 2025 09:44 PM

Google News

ADDED : அக் 19, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்கு சொந்தமான குண்டுமலை, மாட்டுபட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் புலியின் நடமாட்டத்தை தொழிலாளர்கள் நேரில் பார்த்தனர். தவிர அப்பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பசுக்கள் புலிகளிடம் சிக்கி பலியாகின.

அதனால் புலிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி குண்டுமலை எஸ்டேட் மற்றும் மாட்டுபட்டியில் தனியார் ஆங்கிலம் மீடியம் பள்ளி ஆகிய பகுதிகளில் வனத்துறையினர் தலா 2 கேமராக்கள் வீதம் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். கேரமாக்களில் புலிகளின் நடமாட்டம் பதிவாகும் பட்சத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மூணாறு வனத்துறை அதிகாரி பிஜூ தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us