ADDED : செப் 28, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலுாரை சேர்ந்தவர் அர்ச்சுணன் 40. இவர் போதை புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள 128 கிலோ போதை புகையிலையை பறிமுதல் செய்து அர்ச்சுணனை கைது செய்தனர். கம்பத்தைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவரிடம் வாங்கி வந்ததாக கூறிய தகவலைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.