/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை தை அமாவாசை; கோயிலில் வசதி மேம்படுத்த வலியுறுத்தல்
/
நாளை தை அமாவாசை; கோயிலில் வசதி மேம்படுத்த வலியுறுத்தல்
நாளை தை அமாவாசை; கோயிலில் வசதி மேம்படுத்த வலியுறுத்தல்
நாளை தை அமாவாசை; கோயிலில் வசதி மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : பிப் 08, 2024 05:01 AM
பெரியகுளம் : நாளை தை அமாவாசை முன்னிட்டு பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் வசதிகள் செய்திட கோயில்நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பழமையான பிரசித்தி பெற்ற கோயில். கோயில் அருகே செல்லும் வராகநதியின் வலது, இடதுபுறம் கரையில் அமைந்திருக்கும் ஆண், பெண் மருத மரங்கள் நடுவே குளித்து சாமியை வணங்குவதால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.
நாளை (பிப்.9) தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வராகநதி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்து செல்வர். துணி மூடைகள்,பாசி படர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.திதி கொடுப்பவர்களிடம் விருப்பம் போல் ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கின்றனர். நியாயமான கட்டணம் வசூலிப்பதை கோயில் நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும்.போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு,வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.

