ADDED : ஜன 02, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கேரளா, காஞ்சிராபள்ளியைச் சேர்ந்த பைஷல் 29, உள்பட நான்கு பேர் கொண்ட குழு வாகமண்ணில் புத்தாண்டை கொண்டாட நேற்று முன்தினம் காரில் வந்தனர்.
பீர்மேடு அருகில் உள்ள குட்டிக்கானம் பகுதியில் இரவு 10:30 மணிக்கு வந்தபோது காரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு மூன்று பேர் இறங்கிய நிலையில், பைஷல் இறங்குவதற்கு முன் திடீரென கார் 350 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதில் இடிபாடுகளில் சிக்கி பைஷல் இறந்தார். புத்தாண்டை கொண்டாட வந்தவர்கள் சோகத்தில் திரும்பினர். பீர்மேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

