sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கம்பமெட்டில் பஸ் ஸ்டான்ட் அமைக்க வர்த்தகர்கள், ஏல விவசாயிகள் கோரிக்கை

/

கம்பமெட்டில் பஸ் ஸ்டான்ட் அமைக்க வர்த்தகர்கள், ஏல விவசாயிகள் கோரிக்கை

கம்பமெட்டில் பஸ் ஸ்டான்ட் அமைக்க வர்த்தகர்கள், ஏல விவசாயிகள் கோரிக்கை

கம்பமெட்டில் பஸ் ஸ்டான்ட் அமைக்க வர்த்தகர்கள், ஏல விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஆக 22, 2025 02:39 AM

Google News

ADDED : ஆக 22, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: குமுளியில் பஸ் ஸ்டாண்ட் போல் தமிழக பகுதியான கம்பமெட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தகர்கள், ஏல விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தையும் கேரளாவையும் இணைக்க குமுளி, கம்பமெட்டு மற்றும் போடிமெட்டு பகுதிகள் உள்ளன. இந்த மூன்று பாதைகள் வழியாக இரு மாநில போக்குவரத்து நடைபெறுகிறது. போடிமெட்டு மற்றும் குமுளி ரோடுகள் தேசிய நெடுஞ்சாலை கையகப்படுத்தி உள்ளது. கம்பமெட்டு ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது.

கேரளாவிற்குள் செல்ல குமுளி மற்றும் போடிமெட்டு வழியாக செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் பஸ் வசதிகள் செய்துள்ளது. ஆனால் இந்த ரோட்டின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான ஜீப் வாகனங்களில் ஏலத் தோட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும் கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு செல்கின்றனர்.

அதே போன்று இடுக்கி மாவட்டத்தில் வசிப்பவர்களும் தினமும் தேனி மாவட்டத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர். ஆனால் நெடுங்கண்டம், கட்டப்பனை நகரங்களுக்கு மட்டும் பஸ் வசதி உள்ளது.

கம்பமெட்டில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தவும், கம்பத்திலிருந்து கம்பமெட்டுக்கு அடிக்கடி பஸ்களை இயக்கவும் இரு மாநில பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது குமுளியில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. அதே போல் கம்பமெட்டில் பஸ் ஸ்டாண்ட் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவிற்குள் பஸ் இயக்க வேண்டும் என்றால் கேரளாவிடம் அனுமதி கேட்க வேண்டும். கம்பமெட்டு வரை என்றால் கேட்க தேவையில்லை. மேலும் கம்பமெட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடமும் உள்ளது. வனத்துறை ஊழியர் குடியிருப்பு பாழடைந்து பயனற்றதாக உள்ளது. அந்த இடத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்டலாம். இதனால் அரசிற்கு வருவாயும் கிடைக்கும்.

இருமாநில பொதுமக்களுக்கு குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும். எனவே பஸ் ஸ்டாண்ட் கட்டவும், கூடுதல் பஸ்களை இயக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us