sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

/

நகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

நகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

நகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு


ADDED : பிப் 12, 2025 05:34 AM

Google News

ADDED : பிப் 12, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பத்தில் சாலையோரங்களில் கடை நடத்துபவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவுமாறு நகராட்சி கமிஷனரிடம் மனு

அளித்தனர்.

கம்பம் நகராட்சியில் ஆங்காங்கே ரோட்டோரங்களில் காய்கறி, பழங்கள், தேங்காய், பலசரக்கு கடைகள் நடத்தி வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளை, கடைகளை அகற்றிக் கொள்ள கடந்த வாரம் உத்தரவிட்டது.

வாரச்சந்தைக்கு உள்புறம் கடைகள் வைத்துக் கொள்ள கூறப்பட்டது. இதனால் சாலையோர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காந்திஜி வீதி, பார்க் ரோடு, உழவர் சந்தை வீதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி வீதி, வேலப்பர் கோயில் வீதி உள்ளிட்ட வீதிகளில் நூற்றுக்கணக்கான கடைக்காரர்கள்உள்ளனர்.

நேற்று காலை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நகராட்சி கமிஷனர் உமா சங்கரிடம் மனு அளித்தனர்.

அதில், அன்றாடம் வாழ்க்கை பிழைப்புக்காக கடைகள் நடத்தி வருகிறோம்.

கடைகளை காலி செய்ய வலியுறுத்தினால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவம் போன்றவற்றிற்கு இதுவே கை கொடுத்து வருகிறது.

கடைகளை காலி செய்தால் எங்களுக்கு வேறு தொழில் இல்லை. எனவே எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us