ADDED : மார் 30, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : கேரளாவில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன கூட்டம் (எஸ்.என்.டி.பி) எனும் அமைப்பு செயல்படுகிறது.
அதன் அம்பலபுழா யூனிட் சார்பில் பயிற்சி முகாம் மூணாறில் மூன்று நாட்கள் நடக்கிறது. அமைப்பின் துணைத்தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளி நேற்று முகாமை துவக்கி வைத்தார். அம்பலபுழா யூனிட் தலைவர் ஹரிதாஸ் தலைமை வகித்தார். 60 கிளைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். முகாமில் பல்வேறு தலைப்புகளில் கருந்தரங்கம், பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.