ADDED : செப் 13, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
கூடலுார், செப். 14-
கூடலுாரில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நடந்தது.
கூடலுார் கூலிக்காரன் ஓடை பாலம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக குப்பை, பாலிதீன் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் ஓடை முழுவதும் குப்பை மேடாக மாறி துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்நிலையில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் கூடலுார் ஒருங்கிணைப்பாளர் திருக்குமரன் தலைமையில் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து குப்பையை அகற்றி சீரமைத்தனர். சீரமைத்த பகுதியில் தனியார் பள்ளி சார்பில் குப்பை கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அப்பகுதியில் நேற்று அமைப்பு நிர்வாகிகள் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
