ADDED : பிப் 24, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : போடி அருகே வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் பவுன்தாய் 66. இவர் தனது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்துள்ளார்.
இது போல சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த ராமராஜ் 70. என்பவர் பெட்டி கடையில் விற்பனை செய்தற்காக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்துள்ளார்.
போடி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து 60 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.