ADDED : மே 18, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி பாரதிநகரை சேர்ந்தவர் முருகன் 54. இவர் தனது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார்.
போலீசார் முருகனை கைது செய்து விசாரித்ததில், குப்பழகிரி தோட்டம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் 45. என்பவரிடம் வாங்கியது தெரிந்தது.
போடி டவுன் போலீசார் முருகன், கார்த்திகேயன் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.