ADDED : பிப் 27, 2026 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மேகமலையை சேர்ந்த ராமசாமி மகன் ராஜா 48. இவர் தும்மக்குண்டு மூலவைகை ஆற்றுப்பாலத்தின் அருகே மதுபானம் விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது.
ராஜாவை கைதுசெய்து அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் 37. இவர் கோகிலாபுரம் வாய்கால்கரை அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்தார். தகவல் அறிந்து உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் ராம்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

