sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மண்சரிவில் இருவர் பலி கண்காணிப்பாளர் கைது

/

மண்சரிவில் இருவர் பலி கண்காணிப்பாளர் கைது

மண்சரிவில் இருவர் பலி கண்காணிப்பாளர் கைது

மண்சரிவில் இருவர் பலி கண்காணிப்பாளர் கைது


ADDED : செப் 20, 2025 04:41 AM

Google News

ADDED : செப் 20, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே சித்திராபுரத்தில் தனியார் தங்கும் விடுதியில் செப்.17ல் கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் பைசன்வாலியைச் சேர்ந்த பென்னி 49, ஆனச்சால் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் 40, ஆகியோர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் வி.ஏ.ஓ., ஆன்ஷில் வெள்ளத்தூவல் போலீசில் புகார் அளித்தார்.

விடுதி உரிமையாளர் ஷெரின்அனிலா ஜோசப், அவரது கணவர் ஷெபி, கட்டுமான பணி கண்காணிப்பாளர் ஆலுவாவைச் சேர்ந்த ஜெய்சன் 45, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஜெய்சனை போலீசார் கைது செய்தனர். இவர் கட்டட உரிமையாளர்களின் உறவினராகும். 'பணிகளை நிறுத்துமாறு வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தும், அதனை மீறி பணிகள் செய்ய உடந்தையாக இருந்தவர்கள் குறித்து விரிவாக விசாரணை துவங்கியது', என இடுக்கி டி.எஸ்.பி. ராஜன் கே. அரமனா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us