/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர்கள் விபத்து: கல்லூரி மாணவர் இருவர் பலி
/
டூவீலர்கள் விபத்து: கல்லூரி மாணவர் இருவர் பலி
ADDED : நவ 18, 2024 07:09 AM
போடி, : போடியில் 2 டூவீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லுாரியில் படிக்கும் இரு மாணவர்கள் பலியாகினர்.
போடி தர்மத்துப்பட்டி கருப்பசாமி கோயில் தெரு எலக்ட்ரீசியன் வீரராஜ் 26. இவர் பெருமாள் கோயில் தெரு ராஜமாணிக்கத்துடன் 6 நாட்களுக்கு முன் வேலைக்காக டூவீலரில் பரமசிவன் கோயில் தெருவில் சென்றார்.
போடி சுப்புராஜ் நகர் வெண்ணிமலை தெரு விமல்ராஜ் 21. ஜே.கே.பட்டியை சேர்ந்த சூர்யபிரகாஷ் 20. இருவரும் போடி தனியார் கல்லுாரியில் பி.காம் சி.ஏ., 3ம் ஆண்டு படிக்கின்றனர். இந்த 2 மாணவர்களும் வஞ்சி ஓடை வல்லடிகார சுவாமி கோயில் வழியாக டூவீலரில் வேகமாக சென்றனர்.
அப்போது வீரராஜ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நால்வரும் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தலையில் பலத்த காயம் அடைந்த கல்லுாரி விமல்ராஜ் போடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
ராஜமாணிக்கம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். சூர்யபிரகாஷ் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.