ADDED : பிப் 16, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு நகரில் ஓடிக் கொண்டிருந்த டூவீலர் திடிரென தீப்பற்றிய சம்பவத்தில் சுற்றுலா பயணிகள் காயம் எதுவும் இன்றி தப்பினர்.
கேரளா, கொல்லத்தைச் சேர்ந்த ஷனீப், தனது பெண் தோழியுடன் டூவீலரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் நேற்று பகல் 11:30 மணிக்கு நகரில் டூவீலரில் சென்றபோது திடீரென தீப்பற்றியது. டூவீலரை நிறுத்தி விட்டு தக்க சமயத்தில் இருவரும் இறங்கியதால் காயங்கள் எதுவும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மூணாறு போலீசார் விசாரித்தனர்.