ADDED : செப் 24, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: வத்தலக்குண்டு காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் 34. தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கெங்குவார்பட்டி வடக்கு தெருவில் தனது நண்பர் நவீன்குமாரை பார்ப்பதற்கு டூவீலரில் வந்துள்ளார்.
டூவீலரை சாவியுடன் நிறுத்திவிட்டு அலைபேசியில் நவீன்குமாரின் வீட்டு விலாசம் கேட்டுள்ளார்.
திரும்பி பார்த்தபோது டூவீலரை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். தேவதானப்பட்டி போலீசார் டூவீலர் திருடனை தேடி வருகின்றனர்.
--