/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தூர்வாராத வேலப்பன் குளத்து ஓடை மழை நீர் தேக்க முடியாமல் சிரமம்
/
தூர்வாராத வேலப்பன் குளத்து ஓடை மழை நீர் தேக்க முடியாமல் சிரமம்
தூர்வாராத வேலப்பன் குளத்து ஓடை மழை நீர் தேக்க முடியாமல் சிரமம்
தூர்வாராத வேலப்பன் குளத்து ஓடை மழை நீர் தேக்க முடியாமல் சிரமம்
ADDED : ஜூலை 06, 2025 04:18 AM
தேவாரம்: தேவாரம் அருகே எரணம்பட்டியில் உள்ள வேலப்பன்குளம் ஓடை தூர்வாராததால் முட்புதரராகவும், பாலிதீன் கழிவுகள் தேங்கி உள்ளதால் குளத்தில் மழை நீரை தேக்க முடியாத நிலை உள்ளது.
தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பெய்யும் மழை நீர் வேலப்பன் குளத்து ஓடை வழியாக தம்மிநாயக்கன்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பகுதிகளை கடந்து எரணம்பட்டி எரணம்குளம் கண்மாயில் கலக்கிறது. இங்கு நிரம்பும் நீரானது கோணாம்பட்டி, நாகலாபுரம், சங்கராபுரம், திம்மிநாயக்கன்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500 ஏக்கரில் நேரடியாகவும், 300 ஏக்கர் மறைமுகமாக பாசன வசதி பெறும். தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து எரணம்பட்டியில் உள்ள வேலப்பன் குளத்து நீர்வரத்து ஓடை வரை இருபுறமும் விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
எரணம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள வேலப்பன்குளத்து ஓடை தூர் வாராததால் செடிகள் வளர்ந்து, பாலிதீன் குப்பைதேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரகேடு ஏற்படுகிறது. மழைக் காலங்களில் மழைநீர் சீராக செல்லவும் எர்ணாகுளம் கண்மாயில் மழை நீரை முழுவதும் தேக்க முடியாத நிலை உள்ளது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேவாரம் மலை அடிவாரப் பகுதியில் இருந்து வேலப்பன் குளம் நீர்வரத்து ஓடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஓடைதூர்வார வேண்டும்.

