/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாட்டிற்கு வராத விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்
/
பயன்பாட்டிற்கு வராத விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்
பயன்பாட்டிற்கு வராத விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்
பயன்பாட்டிற்கு வராத விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்
ADDED : அக் 31, 2025 02:04 AM
உத்தமபாளையம்:  உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  முடங்கியுள்ளது.
உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில்   ரூ.4 கோடியில் விபத்து அவசர சிகிச்சை பிரிவிற்கு புதிய கட்டடம்   2 ஆண்டுகளாக கட்டுமான பணி நடந்தது.
தரைத்தளம் இல்லாமல் 2 மாடிகளை கொண்ட இந்த புதிய கட்டடம் கட்டி முடித்து காட்சி பொருளாக உள்ளது.  திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள 72 படுக்கைகளுடன் , புதிய கட்டடத்திற்கு 32 படுக்கை வசதியும்  கேட்கப்பட்டுள்ளது . இங்கு 100 படுக்கை வசதிகள் கிடைத்தால் கூடுதல் டாக்டர் பணியிடங்கள் கிடைக்கும். விரைவாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.
இது குறித்து மருத்துவ அலுவலர் ஜின்னாவிடம் கேட்டதற்கு , ''அது சம்பந்தமாக நீங்கள் தான் இணை இயக்குநரிடம்  கேட்க வேண்டும். எனக்கு ஒன்றும் தெரியாது என்றார்

