/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருப்பணி விரைவுபடுத்த வலியுறுத்தல்
/
லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருப்பணி விரைவுபடுத்த வலியுறுத்தல்
லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருப்பணி விரைவுபடுத்த வலியுறுத்தல்
லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருப்பணி விரைவுபடுத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 26, 2025 04:19 AM
சின்னமனூர்: சின்னமனூர் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் எட்டு மாதங்களாக நடைபெறும் திருப்பணியினை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையதுறை முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சின்னமனூரில் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் நின்ற நிலையில் ஆளுயரத்திற்கு பெருமாள் நிற்பதும், காலடியில் ஆஞ்சநேயர் இருப்பதும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
பெருமாளின் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது வேறு கோயில்களில் காண முடியாத ஒன்றாகும்.
இக் கோயிலின் திருப்பணிகள் இவ்வூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்களாக செய்து வருகின்றனர். திருப்பணி துவங்கி 8 மாதங்களை கடந்துள்ளது.
கோயிலில் வெளிப் பிரகாரம் தரைத் தளம் புதுப்பித்தல், உள்பிரகாரம் புதுப்பித்தல், ராஜகோபுரம் பொம்மைகள் சீரமைத்தல் மற்றும் புனரமைத்தல், ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசுதல், மடப்பள்ளி புதுப்பித்தல், சிறிய அளவிலான மண்டபம் ஒன்று கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பணியையும் ஒரு உபயதாரர் வீதம் 10 க்கும் மேற்பட்ட உபயதாரர்கள் திருப்பணிகளை செய்து வருகின்றனர்.
திருப்பணிகளை விரைவுபடுத்தி, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பக்தர்கள் கூறுகையில், ' லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருப்பணிகளும் நடைபெறுகிறது.
இருந்த போதும் கடந்த 8 மாதங்களாக பக்தர்களால் பிரகாரத்தை சுற்ற முடியாத நிலையில் தரை தோண்டப்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்,
திருப்பணிகள் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்து அதன் பின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.