sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உயிர் உரங்கள் தயாரிப்பில் இலக்கை எட்ட துரித நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

/

உயிர் உரங்கள் தயாரிப்பில் இலக்கை எட்ட துரித நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

உயிர் உரங்கள் தயாரிப்பில் இலக்கை எட்ட துரித நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

உயிர் உரங்கள் தயாரிப்பில் இலக்கை எட்ட துரித நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


ADDED : அக் 23, 2024 05:10 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் ,: உத்தமபாளையம் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் 2023--2024 ம் ஆண்டிற்கான 55 ஆயிரம் லிட்டர் இலக்கு எட்டும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல், வாழை, நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து வகைப் பயிர்களுக்கும் தேவையான உயிர் உரங்களான அசோஸ்ஸ்பரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் போன்றவற்றை திரவ வடிவில் உற்பத்தி செய்யும் வேளாண் உயிர் உரங்கள் உத்தமபாளையம் உற்பத்தி மையம் தயாரிக்கப்படுகிறது.

திடப் பொருளாக ஆண்டிற்கு 246 மெ.டன் உற்பத்தி செய்து வந்தனர்.

நவீன தொழில்நுட்பங்களை புகுத்தும் அடிப்படையில் திரவ வடிவிலான உயிர் உங்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் லிட்டர் உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, நாமக்கல், திருச்சி, தேனி மாவட்டங்களுக்கு விநியோகிக்க வேளாண் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இங்கு உற்பத்தி செய்யப்படும் உயிர் உரங்கள் வேளாண் துறை டெப்போக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தனியார் கடைகளில் கிடைக்காது.

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்கின்றனர். 500 மில்லி பொட்டாஷ் முழு விலை ரூ.300. ஆனால் 50 சதவீத மானியத்தில் 500 மில்லி பொட்டாஷ் ரூ.150 க்கு வேளாண் துறை வழங்குகிறது. திரவ வடிவிலான உரங்களை பயிர்கள் வேர்கள் மூலம் விரைவாக கிரகித்து கொள்கிறது.

2023--2024 ம் ஆண்டிற்குரிய 55 ஆயிரம் லிட்டர் என்ற இலக்கில் 50 சதவீதம் மட்டுமே இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

55 ஆயிரம் லிட்டர் என்ற இலக்கில் இதுவரை 22 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 33 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்ய வேண்டும்.

வேளாண் உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்து உற்பத்தியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us