sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பைனான்சியர் மீது கந்துவட்டி வழக்கு

/

பைனான்சியர் மீது கந்துவட்டி வழக்கு

பைனான்சியர் மீது கந்துவட்டி வழக்கு

பைனான்சியர் மீது கந்துவட்டி வழக்கு


ADDED : மே 31, 2025 12:49 AM

Google News

ADDED : மே 31, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வீரபாண்டி தர்மாபுரி தெற்குத்தெரு சுருளியப்பன் 56. பசுமாடுகள் வளர்த்து பால் விற்பனை செய்து வருகிறார்.

இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன் பூமலைக்குணடுவை சேர்ந்த கருப்பையா அறிமுகமானார்.

இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருவதாகவும், கறவை மாடுகளை வாங்கி 2 பைசா வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறேன் எனக்கூறியுள்ளார். இதனை நம்பிய சுருளியப்பன், தொழில் அபிவிருத்திக்காக குறைந்த வட்டியில் கருப்பையாவிடம் ரூ.5 லட்சம் கடனாக பெற்றார்.

இதற்காக ரூ.10 ஆயிரம் வட்டியும், ரூ.20 ஆயிரம் அசல் தொகை என கருப்பையா கூறியதால் மூன்று ஆண்டுகளாக (36 மாதங்கள்) ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் திரும்பி வழங்கியுள்ளார்.

அதன் பின்பும், கருப்பையா ரூ.10 வட்டிக்குதான் கடன் கொடுத்தேன் எனக்கூறி சுருளியப்பன் ரூ.15 லட்சம் வழங்க கூறி கொலை மிரட்டல் விடுத்து, அடிக்கடி வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி அவமானப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட சுருளியப்பன் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் அளித்த புகாரினை தொடர்ந்து வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர், கருப்பையா மீது கந்துவட்டி தடுப்பு சட்டம், கொலைமிரட்டல் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us