ADDED : ஆக 05, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : கொடைக்கானல் பாக்யாபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ரஷீத் 47. காய்கறி வியாபாரி. வேனில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்தில் விற்பனைக்கு சென்றார். வேனை கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்த மேகநாதன் 52, ஓட்டினார்.
கொடைக்கானல் காட்ரோடு - டம்டம்பாறை அருகே வேன் செல்லும் போது, பிரேக் பிடிக்காததால் இடதுபுறம் பாறையில் மோதி நின்றது.
இதில் முகமது ரஷீத் காயம் அடைந்தார். வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-

