ADDED : நவ 11, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் காளியம்மாள் 70. தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளர். டி.கள்ளிப்பட்டி அங்காளீஸ்வரி கோயில் தெருவில் வசிக்கும் இவரது மகள் சித்ரா ஆனந்தி கணவர் செல்வபாண்டி 37, டூவீலரில் மாமியாரை டி.கள்ளிப்பட்டியில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு கைலாசபட்டிக்கு செல்வபாண்டி சென்றுள்ளார். பெரியகுளம் தேனி ரோடு டி.கள்ளிப்பட்டி அருகே வேகமாக சென்ற டூவீலரிலிருந்து காளியம்மாள் விழுந்தார்.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காளியம்மாள் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-

