ADDED : டிச 26, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் ரோட்டின் ஓரங்களில் இருந்த மரங்களில் விளம்பர போர்டு வைக்க அடிக்கப்பட்ட ஆணிகள் தன்னார்வ அமைப்புகள் மூலம் அகற்றப்பட்டன.
ஆண்டிபட்டி வாசவி கிளப், லயன்ஸ் கிளப், தேனி இளம்பிறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலமுருகன், சுரேஷ், மேல்மங்கலம் வி.ஏ.ஓ., ராஜ்குமார், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை அற நல்லுலகம் பொது நல அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

