sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

/

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


ADDED : மார் 31, 2025 07:21 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டி 10வது வார்டு தெற்கு தெரு விநாயகர் கோயில் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.

இப்பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கும் ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆண்டிபட்டி சேடபட்டி திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் ஆகிறது. தற்போது அனைத்து வார்டுகளிலும் வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் ஆகிறது. மற்ற நாட்களில் ஆங்காங்கு உள்ள போர்வெல், பொதுக் கிணறுகளில் கிடைக்கும் நீரை பயன்படுத்துகின்றனர். தற்போது கோடை துவங்கியதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சக்கம்பட்டி 10 வது வார்டு விநாயகர் கோயில் அருகில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.

வார்டு கவுன்சிலர் மீனாட்சி கூறியதாவது: கடந்த இரு வாரங்களாக அப்பகுதியில் குழாய் உடைத்து குடிநீர் வீணாகிறது. ஏற்கனவே சரிசெய்த இடத்தில் தற்போது தண்ணீர் வீணாவது அதிகரித்துள்ளது. பேரூராட்சி அலுவலர்கள் கண்காணிப்பு இல்லை. தண்ணீர் வினியோகத்தில் பேரூராட்சி அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us