/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
/
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
ADDED : பிப் 20, 2025 02:19 AM
ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக நேற்று காலை நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
டிச., 18 முதல் மதுரை திண்டுக்கல், மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முறைப்பாசன அடிப்படையில் பிப்.,15ல் அணையில் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 63.29 அடி. அணை மொத்த உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 148 கன அடி.

