sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

/

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : நவ 24, 2024 02:15 AM

Google News

ADDED : நவ 24, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் இரு போக பாசன நிலங்களுக்காக வைகை அணையில் இருந்து ஜூலை 3ல் நீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் பிரதான கால்வாய் ஒரு போக பாசன நிலங்களுக்காக செப்.15ல் இங்கிருந்து கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. முறைப் பாசனம் நடைமுறையில் உள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வைகை பூர்வீக பாசன நிலங்களுக்காக நவ. 10ல் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. தற்போது வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள நிலங்களுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் நீர் ஆற்றின் வழியாக செல்கிறது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் நவ. 19ல் நிறுத்தப்பட்ட நீர் நேற்று மீண்டும் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடியாக இருந்த நீர் வெளியேற்றம் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1630 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 58.79 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1183 கன அடி.






      Dinamalar
      Follow us