/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
/
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : செப் 20, 2025 10:43 PM

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு ஒருபோக பாசன நிலங்களுக்கு செப்.18 ல் வினாடிக்கு 1130 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள ஒரு போக பாசனப்பரப்பாகிய 85,536 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்கள் 19,439 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது.
இந்நிலையில் அணையில் திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று மதியம் 2:15 மணிக்கு வினாடிக்கு 1330 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 68.57 அடியாக இருந்தது. ( மொத்த உயரம் 71 அடி).
நீர்வரத்து வினாடிக்கு 788 கனஅடி.