/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தர்பூசணியில் செயற்கை நிறமி இல்லை; தோட்டக்கலைத்துறை விளக்கம் தோட்டக்கலைத்துறையினர் தகவல்
/
தர்பூசணியில் செயற்கை நிறமி இல்லை; தோட்டக்கலைத்துறை விளக்கம் தோட்டக்கலைத்துறையினர் தகவல்
தர்பூசணியில் செயற்கை நிறமி இல்லை; தோட்டக்கலைத்துறை விளக்கம் தோட்டக்கலைத்துறையினர் தகவல்
தர்பூசணியில் செயற்கை நிறமி இல்லை; தோட்டக்கலைத்துறை விளக்கம் தோட்டக்கலைத்துறையினர் தகவல்
ADDED : ஏப் 27, 2025 07:01 AM
தேனி : மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, விற்பனை செய்யப்படும் தர்பூசணிகளில் செயற்கை நிறமிகள் கலப்படம் செய்யவில்லை என ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம். மேலும் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி1, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. ஜன., பிப்ரவரியில் விதைப்பு செய்து கோடையில் பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. பராமரிப்பை பொறுத்து ஒரு ஏக்டேருக்கு 25 முதல் 30 டன் வரை மகசூல் பெறலாம். இந்நிலையில் தர்பூசணியில் செயற்கை நிறமிகள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, மாவட்டத்தில் தர்பூசணி சாகுடி செய்யப்பட்டுள்ள வயல்கள், தேனி நகர்பகுதியில் விற்பனை செய்யப்படும் கடைகளில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நிர்மலா தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் கூறுகையில், 'களஆய்வில் தர்பூசணியில் எவ்வித செயற்கை நிறமிகளும் கலப்படம் செய்யவில்லை என உறுதியாகி உள்ளது', என்றனர்.

