/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காரை கவிழ்த்த காட்டு யானை ஜெர்மனி பயணியர் தப்பினர்
/
காரை கவிழ்த்த காட்டு யானை ஜெர்மனி பயணியர் தப்பினர்
காரை கவிழ்த்த காட்டு யானை ஜெர்மனி பயணியர் தப்பினர்
காரை கவிழ்த்த காட்டு யானை ஜெர்மனி பயணியர் தப்பினர்
ADDED : பிப் 16, 2025 02:26 AM

மூணாறு: மூணாறு அருகே சாலையில் சென்ற காரை காட்டு யானை கவிழ்த்து சேதப்படுத்தியது. ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு தம்பதியினர் உட்பட ஐந்து பேர் சிறு காயங்களுடன் தப்பினர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த பில்லோடர், 66, அவரது மனைவி ஷெர்லி, 60, ரெஹிதாமஸ், 62, அவரது மனைவி கரோலின், 58, ஆகியோர் மூணாறுக்கு காரில் சுற்றுலா வந்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரதீஷ், 45, காரை ஓட்டினார்.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், மூணாறில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, 'சிக்னல் பாயின்ட்' பகுதியில் காலை, 10:45 மணிக்கு சென்றபோது, 'கிராண்டீஸ்' காட்டில் இருந்து வந்த 'மக்னா' யானை காரை முட்டி கீழே தள்ளி, தந்தங்களால் குத்தியது. பயணியர் கூச்சலிட்டதால் யானை காட்டிற்குள் சென்றது.
அந்த வழியில் வந்தவர்கள் காரில் சிக்கியவர்களை மீட்டு, தேவிகுளம் குடும்ப சுகாதார மையத்திற்கு அனுப்பினர். பின்னர், காட்டிற்குள் ஆக்ரோஷமாக சென்ற யானை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த சொக்கநாடு எஸ்டேட், கொளமங்காய் டிவிடினைச் சேர்ந்த ஆறுமுகத்தின் பசுவை தாக்கிக் கொன்றது.

