sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புலிகள் காப்பக பகுதியில் நடமாடும் காட்டு யானைகள்

/

புலிகள் காப்பக பகுதியில் நடமாடும் காட்டு யானைகள்

புலிகள் காப்பக பகுதியில் நடமாடும் காட்டு யானைகள்

புலிகள் காப்பக பகுதியில் நடமாடும் காட்டு யானைகள்

1


ADDED : ஏப் 13, 2025 07:14 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 07:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் ஆனமலை புலிகள் காப்பகம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கேரளாவை, தமிழகம் உள்பட பிற மாநிலங்களுடன் இணைக்கும் ரோடுகளில் மூணாறு, உடுமலைபேட்டை மாநில நெடுஞ்சாலை மிகவும் முக்கியமானதாகும்.

இந்த ரோட்டில் கேரள, தமிழக எல்லையான சின்னார் பகுதியில் ஆனமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி துவங்குகிறது. அதில் காட்டு மாடு, யானை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் ஏராளம் உள்ளன. காட்டு யானைகள் பகல், இரவு என எந்நேரமும் ரோட்டில் நடமாடுவதை காணலாம். குறிப்பாக சின்னார் அருகே ' எஸ்' வளைவு, பொங்கன்ஓடை ஆகிய பகுதிகளில் ரோடுகளில் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடை துவங்கியதால் தீவனம், குடிநீர் ஆகியவற்றை தேடி ரோடுகளில் கூடுதலாக நடமாடுகின்றன. கோடை சுற்றுலா சீசன் துவங்கியதால் மறையூர், காந்தலூர், மூணாறு ஆகிய பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. அவர்கள் யானைகளை கடந்து செல்ல வெகு நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. தமிழக வனத்துறையினர் யானைகளை கண்காணித்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us