sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா; ஆறு சுருங்கி கால்வாயாக மாறும் அவலம் தொடர்கிறது

/

முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா; ஆறு சுருங்கி கால்வாயாக மாறும் அவலம் தொடர்கிறது

முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா; ஆறு சுருங்கி கால்வாயாக மாறும் அவலம் தொடர்கிறது

முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா; ஆறு சுருங்கி கால்வாயாக மாறும் அவலம் தொடர்கிறது

2


UPDATED : ஆக 20, 2025 08:03 AM

ADDED : ஆக 20, 2025 06:48 AM

Google News

UPDATED : ஆக 20, 2025 08:03 AM ADDED : ஆக 20, 2025 06:48 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் துவங்கி கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனுார், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வழியாக செல்லும் 47 கி.மீ.. தூரமுள்ள முல்லைப் பெரியாற்றில் ஓடி வைகை அணையில் கலக்கிறது. ஆற்றின் இரண்டு பக்க கரைகள் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் தென்னந்தோப்புகள், மாந்தோப்புகளாக மாறியுள்ளன.

ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் கரைப்பகுதி சேதமடைந்து கூடுதல் தண்ணீர் திறக்கும் போது விளைநிலங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சுருங்கி வரும் ஆற்றை அகலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனுவும் கொடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவில்லை. இதில் நில அளவை, வருவாய்த்துறை, போலீஸ், நீர்வளத்துறை என பல துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணியாக இருப்பதால் இதனை யார் ஒருங்கிணைத்து செய்வது என்பதில் சிக்கல் உள்ளதாக நீர்வளத்துறையினர் புலம்பி வருகின்றனர். இதன் காரணமாகவே நீர்வளத்துறையினரும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும், கால்நடைகளின் தண்ணீர் தாகத்தை தீர்ப்பதற்கும் முல்லைப் பெரியாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இருபோக நெல் சாகுபடி நிலங்களுக்கும், லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் முல்லைப் பெரியாறு உள்ளது. ஆற்றின் கரையை ஆக்கிரமிப்பு அகற்றி அகலப்படுத்துவதுடன் கரைப்பகுதியை பராமரிக்க நீர்வளத்துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us