ADDED : ஆக 02, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே கோவிந்தநகரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பார்க்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்டமனூர் போலீசார் ரோந்து சென்றனர்.
கோவிந்தநகரத்தை சேர்ந்த அம்சவல்லி பெட்டிக்கடையில் மேற்கொண்ட சோதனையில் ரூ.1200 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் சில்லரை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் அம்சவல்லியை கைது செய்தனர்.