ADDED : ஏப் 16, 2025 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம் : தேவாரம் நாடார் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் 49. இவரது மனைவி சாந்தி 45. இவர்களுக்கு யுவன் சங்கர் ராஜா 22. மகனும், நாகலட்சுமி 19. மகளும் உள்ளனர்.
நாகலட்சுமி தனியார் செவிலியர் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வேறு ஒரு நபரை காதலித்துள்ளார். இதனை தாயார் சாந்தி பல முறை கண்டித்தும் கேட்காமல் இருந்துள்ளார். இதனால் மனம் உடைந்த சாந்தி விஷம் குடித்துள்ளார். உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

