ADDED : நவ 22, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கூடலுார் காந்திகிராமம் தெற்குத்தெரு பாக்கியம் 60. இவரின் உறவினர் மகன் சரவணன் 35, டூவீலரை ஓட்ட, பாக்கியம் பின்புறம் அமர்ந்து வீரபாண்டி கோயிலுக்கு சென்றனர். உப்பார்பட்டி விலக்கு அருகே பாக்கியத்திற்கு மயக்கம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் விலக்கு அருகே இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கிய டூவீலரால், பாக்கியம் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், பாக்கியம் இறந்ததாக கூறினர்.வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

