sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூணாறு ஓடையில் குப்பை வீசிய பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

/

மூணாறு ஓடையில் குப்பை வீசிய பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மூணாறு ஓடையில் குப்பை வீசிய பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மூணாறு ஓடையில் குப்பை வீசிய பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


ADDED : மார் 20, 2025 05:37 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறில் ஓடையில் குப்பையை வீசிய பெண்ணுக்கு ஊராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.

மூணாறில் ஊராட்சி தலைமையில் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தூய்மை பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக நடந்தது.

அதில் 55 டன் வரை குப்பை உள்பட கழிவுகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் பிறகு நகரில் ஆற்றோரங்கள், பொது இடங்கள் ஆகியவை சற்று தூய்மை அடைந்தன.

அதனை தொடர்ந்து பின்பற்றும் வகையில் குப்பைகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள தபால் ஊழியர்கள் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் அருகில் உள்ள ஓடையில் குப்பைகளை வீசினார்.

அச்சம்பவம் ஊராட்சி சார்பில் பொறுத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.

அந்த பதிவை வைத்து பெண்ணை அடையாளம் கண்ட ஊராட்சி நிர்வாகம் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.

அத்தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us