sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் வீட்டில் நுழைந்து பெண் வெட்டி கொலை

/

தேனியில் வீட்டில் நுழைந்து பெண் வெட்டி கொலை

தேனியில் வீட்டில் நுழைந்து பெண் வெட்டி கொலை

தேனியில் வீட்டில் நுழைந்து பெண் வெட்டி கொலை


ADDED : டிச 20, 2024 01:11 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி அல்லிநகரம் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் லீலாவதி, 35. கணவர் சின்னச்சாமி. சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு, 21 வயதில் மகன், 20 வயதில் கவுசல்யா என்ற மகளும் உள்ளனர். மகன் கோவை மில்லில் பணிபுரிகிறார்.

கவுசல்யாவிற்கும், திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு, மீனாட்சிபுரம் லாரி டிரைவர் பிச்சைமுத்து, 26, என்பவருக்கும் ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

ஆறு மாதங்களுக்கு முன் கணவரிடம் கோபித்து, தாய் வீட்டிற்கு வந்து விட்ட கவுசல்யா, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்று காலை கவுசல்யா துணிக்கடைக்கு வேலைக்கு சென்றார். லீலாவதி மாடி வீட்டின் சமையலறையில் இருந்தார்.

அப்போது காலை 8:30 மணிக்கு துணியால் முகத்தை மூடியவாறு வீட்டில் நுழைந்த மர்மநபர், மாடிக்கு சென்று, லீலாவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் கழுத்து, கைகளில் வெட்டி கொலை செய்தார்.

பின், துணியால் முகத்தை மூடியபடி கீழே இறங்கி சென்றார். மாடியில் சத்தம் கேட்டு கீழ் வீட்டில் வசிக்கும் பெண் மேலே சென்று பார்த்தபோது, லீலாவதி சமையலறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்பெண், போலீசாருக்கு தகவல் அளித்தார்.

லீலாவதியின் உடல், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

தனிப்படை அமைத்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us