sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.1 லட்சம் கடன் வாங்க 7.45 லட்சம் இழந்த பெண்

/

ரூ.1 லட்சம் கடன் வாங்க 7.45 லட்சம் இழந்த பெண்

ரூ.1 லட்சம் கடன் வாங்க 7.45 லட்சம் இழந்த பெண்

ரூ.1 லட்சம் கடன் வாங்க 7.45 லட்சம் இழந்த பெண்


ADDED : ஜூலை 28, 2025 03:14 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பெண்ணிடம், 1 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக கூறி, 7.45 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாந்தி, 51. இவரது மொபைல் போனுக்கு சில மாதங்களுக்கு முன் ஒருவர் கடன் வழங்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். அப்போது, 1 லட்சம் ரூபாய் உடனடியாக கடன் வழங்குவதாக தெரிவித்தார். கடன் தொகை பெற, 'கட்டணம் செலுத்த வேண்டும்' என்றார்.

அவ்வாறு வழங்கும் தொகையை, கடனுடன் சேர்த்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதை நம்பிய சாந்தி, 15 வங்கி கணக்குகள் மூலம் பல்வேறு தவணைகளாக, 7.45 லட்சம் ரூபாய் வரை பணத்தை அந்நபருக்கு வழங்கினார். ஆனாலும், எந்த தொகையும் அவருக்கு திரும்ப கிடைக்காததால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த சாந்தி, போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி பேர்வழியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us