sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

'மைக்ரோ பைனான்ஸ்' நிதி நிறுவனங்களில் சிக்கித்தவிக்கும் பெண் தொழிலாளர்கள்

/

'மைக்ரோ பைனான்ஸ்' நிதி நிறுவனங்களில் சிக்கித்தவிக்கும் பெண் தொழிலாளர்கள்

'மைக்ரோ பைனான்ஸ்' நிதி நிறுவனங்களில் சிக்கித்தவிக்கும் பெண் தொழிலாளர்கள்

'மைக்ரோ பைனான்ஸ்' நிதி நிறுவனங்களில் சிக்கித்தவிக்கும் பெண் தொழிலாளர்கள்


ADDED : பிப் 13, 2025 05:43 AM

Google News

ADDED : பிப் 13, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறில் தனியார் 'மைக்ரோ பைனான்ஸ்' நிதி நிறுவனங்களிடம் சிக்கி தொழிலாளர்கள் மீள இயலாமல் தவித்து வருகின்றனர்.

கேரளாவில் பாதி விலையில் பொருட்கள் வழங்குவதாக கூறி நடந்த மோசடியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பணத்தை இழந்த நிலையில், மூணாறு பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தனியார் ' மைக்ரோ பைனான்ஸ்' நிதி நிறுவனங்களில் சிக்கி மீள இயலாமல் தவித்து வருகின்றனர்.

மூணாறு பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியம் ரூ.480 வரை வழங்கப்படுகிறது.

பிள்ளைகளின் கல்வி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்பட பல்வேறு செலவுகளை சமாளிக்க இயலாத நிலை உள்ளது. அதனால் தொழிற்சங்கங்களைச் சார்ந்த கூட்டுறவு சங்கங்களில் கடன் உள்பட பல்வேறு கடன்களை பெற்று வருகின்றனர்.

இதனிடையே தொழிலாளர்களின் நிலைமையை அறிந்து களம் இறங்கிய பல்வேறு தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களை குறி வைத்து கடன் வழங்க துவங்கினர்.

அதில் சிக்கிய தொழிலாளர்கள், அதிக வட்டி விகிதம் உள்பட பல்வேறு காரணங்களால் நிதி நிறுவனங்களை விட்டு மீள இயலாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

இது போன்ற சூழலில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை போலீசார் உள்பட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.






      Dinamalar
      Follow us