ADDED : மே 27, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் விவசாய கூலி முருகன் 55. பாண்டீஸ்வரி 45. தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
முருகன் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு, காலை 10:00 மணிக்கு வீடு திரும்புவார். இந்நிலையில் திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோட்டில் வடுகபட்டி அருகே நடந்து சென்ற முருகன் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தென்கரை போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்து வருகின்றனர்.