sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சூறாவளி போன்று சுற்றித்திரியும் படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்

/

சூறாவளி போன்று சுற்றித்திரியும் படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்

சூறாவளி போன்று சுற்றித்திரியும் படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்

சூறாவளி போன்று சுற்றித்திரியும் படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்


ADDED : டிச 23, 2024 05:44 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: ஒரே நாளில் சூறாவளி போன்று நீண்ட துாரம் சுற்றித்திரியும் படையப்பா ஆண் காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மூணாறு பகுதியில் வலம் வரும் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். குறிப்பிட்ட பகுதிகளில் வலம் வந்த படையப்பா, சமீப காலமாக தனது வழித்தடத்தை அதிகரித்து தொலை துாரம் வரை சென்று வருகிறது. ஒரே நாளில் சூராவளி போன்று நீண்ட துாரம் சுற்றித்திரியும் யானையால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மூணாறு அருகே தென்மலை எஸ்டேட் பாக்டரி டிவிஷன் பகுதியில் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு நடமாடிய படையப்பா மதியம் 1:00 மணிக்கு பல கி.மீட்டர் கடந்து கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதிக்கு வந்தது. அப்பகுதியில் நடமாடுவதாக எண்ணிய நிலையில் மாலை 5:00 மணிக்கு இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான 5ம் மைல் சென்றது. அங்கிருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்றது. அங்கு தொழிலாளி ஜெயராமின் வீட்டின் அருகே இருந்த வாழைகளை தின்றதுடன் காலை 7:00 வரை குடியிருப்புகள் அருகே நடமாடியது.






      Dinamalar
      Follow us