sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆன்லைன் வர்த்தகம் என மோசடி ரூ.பல லட்சங்களை இழந்த தொழிலாளர்கள்

/

ஆன்லைன் வர்த்தகம் என மோசடி ரூ.பல லட்சங்களை இழந்த தொழிலாளர்கள்

ஆன்லைன் வர்த்தகம் என மோசடி ரூ.பல லட்சங்களை இழந்த தொழிலாளர்கள்

ஆன்லைன் வர்த்தகம் என மோசடி ரூ.பல லட்சங்களை இழந்த தொழிலாளர்கள்


ADDED : ஜன 05, 2025 06:38 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறில் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தால் பிரபல கம்பெனிகள் பெயரில் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்து தினமும் நூற்றுக் கணக்கில் சம்பாதிக்கலாம் என ஒரு கும்பல் ஆன்லைன் வாயிலாக வலை விரித்தது. அதனை உண்மை என நம்பி தோட்டத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் மோசடி கும்பல் அளித்த கியூ.ஆர். கோடு மூலம் ரூ. 6 ஆயிரம் வீதம் செலுத்தினர். அவர்களுக்கு ஆரம்பத்தில் லாப விகிதம் என தினமும் ரூ.650 வரை வழங்கினர். அதனை அறிந்த ஏராளமானோர் குடும்பதினரின் ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.6 ஆயிரம் வீதம் செலுத்தினர்.

லாப விகிதம் கிடைக்காததால் மோசடி கும்பலை தொடர்பு கொண்டபோது, வங்கியில் கே.ஒய்.சி. இணைய தளம் பதிவு செய்ய வேண்டும் என கூறி மீண்டும் ரூ.6 ஆயிரம் வீதம் கேட்டதால் மோசடி அம்பலமானது. இதனிடையே மோசடி கும்பல் தங்களில் தொடர்பை துண்டித்ததுடன் டிச.18 முதல் ஆன்லைன் சேவையும் முடங்கியது.

இந்த மோசடியில் தோட்ட தொழிலாளர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் ரூ.பல லட்சங்களை இழந்தனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us