sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இலவச பள்ளி சீருடைக்கு அளவு எடுத்து தைத்து வழங்க தொழிலாளர்கள் எதிர்ப்பு

/

இலவச பள்ளி சீருடைக்கு அளவு எடுத்து தைத்து வழங்க தொழிலாளர்கள் எதிர்ப்பு

இலவச பள்ளி சீருடைக்கு அளவு எடுத்து தைத்து வழங்க தொழிலாளர்கள் எதிர்ப்பு

இலவச பள்ளி சீருடைக்கு அளவு எடுத்து தைத்து வழங்க தொழிலாளர்கள் எதிர்ப்பு


ADDED : மார் 12, 2024 11:47 PM

Google News

ADDED : மார் 12, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பள்ளி குழந்தைகள் இலவச சீருடை தைக்க அளவு எடுக்க பள்ளிக்கு செல்லும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தையல் தொழில் கூட்டுறவு சங்க எதிர்ப்பு தெரிவித்து ரோடு மறியல் ஈடுபட முயன்றனர்.அவர்களை மாவட்ட அலுவலர் சமாதனம் செய்தார்.

பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கம் வடகரையில் இயங்கி வருகிறது.

இச் சங்கத்தில் 1350 க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அரசின் பள்ளிச் சீருடைகள் தைப்பதற்கு ஒரு சட்டைக்கு 22.05. டவுசர் ரூ.22.05, பேண்ட் ரூ.55.13, சுடிதார் (டாப், பாட்டம்) செட்டுக்கு ரூ.55.13 என குறைந்த அளவில் தையல் கூலி வழங்கப்படுகிறது.

பெரியகுளத்தில் சங்க உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளாதேவி தலைமையில் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சென்று அளவு எடுத்து துணி தைக்க வேண்டும். காலருக்கு கேன்வாஸ் வைத்து தைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கைகளை தெரிவித்தார். இதற்கு குறைந்த தையல்கூலியால் சிரமப்பட்டு வரும் உறுப்பினர்கள், பள்ளிக்குச் சென்று அளவு எடுப்பது இயலாது எனவும், தையல் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள், வயதில் மூத்தவர்கள் உள்ளனர் என உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மாவட்ட சமூக நல அலுவலர், 'நீங்கள் மறுத்தால் வேறு நபர்களுக்கு தைப்பபதற்கு ஆர்டர் கொடுத்து விடுவோம்', என கூறிவிட்டு சென்றார். அலுவலரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் ரோடு மறியலுக்கு தயாராகினர்.

தேனிக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த அலுவலர் விபரம் அறிந்து மீண்டும் தையல் கூட்டுறவு சங்கத்திற்கு வந்தார். உறுப்பினர்களிடம் தையல் கூலி உயர்வு மற்றும் கோரிக்கைகளை எழுதி வழங்க கேட்டு சமாதானப்படுத்தி சென்றார். பின்னர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us