ADDED : ஏப் 23, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கோட்ட தபால்துறையின் சார்பில், உலக புவி தினத்தை முன்னிட்டு சாந்தி நிகேதன் பப்ளிக் பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவியப் போட்டி நடந்தது.
சிறந்த மூன்று ஓவியங்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேனி கோட்ட தபால்துறை உதவி கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் பேசினார். நிகழ்வில் பள்ளி முதல்வர் டேவிட் அருள் பாக்கியராஜ், ஓவியஆசிரியர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய கவாஸ்கர் ஆகியோர்பங்கேற்றனர்.

