/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
/
திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 29, 2025 09:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாநகராட்சி, நகராட்சிகளைத்தவிர பேரூராட்சி, ஊரக பகுதிகளில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு ஆண்டிற்கு ரூ. ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு நவ., 29ல் இந்த தேர்வு நடக்கிறது.
தேர்வுக்கு எமிஸ் போர்டல் மூலம் நவ., 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

