ADDED : ஜூலை 24, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வீரபாண்டி கிழக்குத்தெரு பெருமாள் மகன் அர்ஜூன் 21. இவர் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி வெளியூர் கடத்தி சென்றார். பெற்றோர் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்த நிலையில் சிறுமியை வாலிபர் சென்னைக்கு கடத்தி சென்று திருமணம்செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம் அர்ஜூனை போக்சோவில் கைது செய்தார்.